ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Tuesday, June 21, 2005

கழுதைபுலி வாழுமிடத்தில் வாழ்வதனால் மீண்டும்!

இரண்டு வாரம் தமிழ் படிக்கும் வசதியில்லாமல் இப்போதுதான் மீண்டும் வர முடிந்தது. சிவக்குமார் சில புளுகுகளை முன்வைத்துள்ளதால் சிலவற்றை மீண்டும் எழுத வேண்டிய கட்டாயத்தினால் மட்டும் இதை எழுதுகிறேன். யாரும் இதை படித்து துன்புறவோ, நேரத்தை விரயம் செய்யவோ அல்ல. மிகையான புளுகுகள் ஏதேனும் வந்தால் ஒழிய மீண்டும் இதை தொடரமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.

1. சென்ற பதிவை எழுதியதன் ஒரே காரணம், நான் ஏதோ நிதானம் தவறி எழுதி நீக்கிவிட்டதாக சிவக்குமார் ஃபிலிம் காட்டியதால், அதற்கு மாறாக வெளிப்படையாக எனது நீக்கப்பட்ட கருத்தை பதிவு செய்வது மட்டுமே. தமிழில் வாசிக்கும் வசதி எனக்கு இருக்காது என்று நான் ராகாகியிலும், என் வலைப்பதிவிலும் அறிவித்த பின்னர், சிவக்குமாரின் ஃபிலிமை ஒரு நண்பரின் வீட்டில் பார்க்க நேர்ந்ததால் அந்த சூட்டோடு சென்ற பதிவை எழுதினேன்.

தொடர்ந்து அவர் சொல்வது போல் நான் நிதானம் தவறி எழுதி எதையும் இன்றுவரை நீக்கியது கிடையாது. இது குறித்து ஏற்கனவே அனுராகிற்கு எழுதிய பதிலில் குறிப்பிட்டுள்ளேன். எழுதி உள்ளிட்ட பின் எதையும் எடிட் செய்யும் வழக்கம் கூட எனக்கு கிடையாது.

சிவக்குமாரையும், வந்தியதேவனையும், ஈழத்தமிழர் குறித்து மிக பச்சையான இனவாத விஷத்தை கக்கிய காரணத்தால், கோபத்துடன் சில வசை வார்த்தைகளை சொல்லியிருக்கிறேன். அதை நீக்கவில்லை. அதை மீண்டும் எந்த இடத்திலும் சொல்லமுடியும். நேரடியாய் அவர்களின் முகத்தின் நேராகவும் அதைத்தான் சொல்லுவேன். மற்றபடி பூடகமாய் அவர் குறிப்பிடும் இன்னொரு விஷயம் டோண்டுவிற்கு நான் ஒருமுறை எழுதியது. அது குறித்து தனிப்பட்ட முறையில் டோண்டுவுடன் மின்னஞ்சலில் பேசிய பிறகு, சில காரணங்களை முன்னிட்டு, அவர் அனுமதியையும் ஆலோசனையையும் பெற்று, நான் எழுதியதையும் அவர் எழுதியதையும் அழித்துள்ளேன். அதில் எதுவும் நிதானமின்றி எழுதப்பட்டதல்ல. அந்த கருத்துக்களும், அதை அழித்ததன் அறிவிப்பும் ஒரு முழுநாள் என் வலைப்பதிவில் இருந்தது. என் பதிவை வழக்கமாய் படிக்கும் எல்லோரும் அதை படித்திருக்க கூடும்.

மற்றபடி "நிதானமில்லாமல் எழுதியவற்றை அழிப்பது என்று நான் எழுதியதைப் படித்ததும், இதுவரை வேறெங்குமே தான் எழுதியதை அழிக்காதது போலவும், என் வலைப்பதிவில் மட்டுமே அதைச் செய்ததாகவும் கற்பனையில் மிதந்து கொண்டு, " என்று சிவக்குமார் சொன்னதில் உண்மையில்லை. நான் எங்கேயும் அழித்ததில்லை. (அதாவது நிதானமின்றி எழுதி அழித்ததில்லை. வேறு காரணங்களுக்காக அழித்திருக்கிறேன்.)

2. அடுத்து சிவக்குமார் தனது வழக்கமான பாணியில், மிக தெளிவாக உண்மையை தெரிந்துகொண்டு பச்சையாக புளுகுவது திண்ணையில் நான் தடை செய்யப்பட்ட கதை குறித்து. என் எழுத்துக்களை ஒரு வரி விடாமல் தொடர்ந்து படிக்கும், அதிலிருந்து மேற்கோள் காட்டும் அவர், இது குறித்த அத்தனை விவரங்களையும் படித்திருப்பார் என்பது எனக்கு தெரியும். தெரிந்தே நடிப்புடன் நான் சொல்வதை திரிக்கிறார் என்பதும் எனக்கு தெரியும். மற்ற பலருக்கும் தெரியும்.

அவர் சொல்வது போல் "குறியை அறுக்க வேண்டும்", "பாஸ்டர்ட்" "நங்கநல்லூர் வரும்போது அவிழ்த்துக் காட்டுகிறேன்" என்பது போன்ற எந்த விஷயமும் நான் திண்ணையில் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் கிடையாது. அரவிந்தன் நீலகண்டன் மிக தெளிவாக, நேரடியாக சொன்ன அறிவியல் சம்பந்தமான சில புளுகுகள் பற்றிய மறுப்பு மட்டுமே அதில் உள்ளது. திண்ணையில் தடை செய்யப்பட்ட கட்டுரை பதிவுகளில் வெளியாகியுள்ளது. என் கட்டுரையை படித்து அதில் உள்ள வசவு வார்த்தைகளை கண்டு பிடித்து தருமாறு மீண்டும் மீண்டும் நான் வாசகர்களை அழைத்துள்ளேன். இப்போது மீண்டும் அழைக்கிறேன். தயவு செய்து என் பதிவுகள் கட்டுரையை படிக்கவும். இது தொடர்பான செய்திகளை பதிவுகள் விவாதகளத்தில் உள்ளன. இப்போது சுட்டி தரமுடியவில்லை.

இந்த விவகாரத்தில் சிவக்குமார் எழுதியுள்ளது பச்சையான பொய். அதுவும் முழுவிவரத்தையும் நன்கு அறிந்துகொண்டு சொல்லப்பட்ட பொய். இந்த விவகாரம் குறித்து விரிவாக ஒரு பதிவு பின்னர் எழுதுவேன்.

3. மற்றபடி நான் சொன்ன சில விஷயங்கள் திரிக்கப்பட்டாலும் நேரடியான புளுகு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. நண்பர் சங்கரபாண்டி சொன்ன குற்றச்சாட்டையும், அதற்கு சிவக்குமாரின் எச்சரிக்கை குறித்தும் முன்னமே மின்னஞ்சல் மூலம் (மட்டும்) அறிந்துகொள்ள முடிந்தது. சிவக்குமார் சூச்சு என்ற பெயரில் எழுதியதாக தீவிரமாய் நம்ப சங்கரபாண்டிக்கு காரணங்கள் இருக்கலாம். அந்த நம்பிக்கையையும் மீறி அது தவறாக இருக்க வாய்புண்டு என்று நினைக்கிறேன். அது எப்படியிருந்தாலும் எனக்கு அப்படி நம்புவதற்கு காரணங்கள் எதுவும் கிடையாது. அதை சொல்லலாம் என்று வந்த போது விசிதா குறித்து சிவக்குமார் எழுதியதை படிக்க முடிந்தது. அடடா, நான் இதுவரை இவர் பற்றி சொன்ன கருத்தை எல்லாம் இதை விட வேறு எந்த விதத்தில் நிறுவ முடியும்? ஹிபாக்கரஸி என்பதன் உரைகல் இவர்தான்! அலுத்து போனாலும் சொல்லத்தான் வேண்டியுள்ளது. இப்படியும் வெட்கம் கெட்ட ஒரு உதாரணம் நிச்சயமாய் வேறு ஒன்று கிடைக்காது. ஆனாலும் நான் இது போன்ற குற்றச்சாட்டுகளை, தெளிவான ஆதாரம் இல்லாத போது, முன்வைப்பதை எதிர்க்கிறேன். இதை நான் ஏற்கனவே அனாதையின் பதிவில் சொல்லியுள்ளேன். சிவக்குமார் குறித்து நான் எழுதிய அத்தனையும் அவர் மற்றவர்கள் சொன்னதை/சில தகவல்களை/தர்கத்தை திரிப்பதையும், அவருடைய எழுத்தை முன்வைத்து மட்டுமே.

இந்த குற்றச்சாட்டை நான் எதிர்ப்பதற்கு காரணம் இது தவறாக இருப்பதற்கான வாய்ப்பு மட்டுமல்ல. இதை முன்வைத்து விவாதத்தை கடத்திகொண்டு போய், தனக்கு சாதகமாய் பயன்படுத்திகொள்வது. இதை ஜெயமோகன் பல காலமாய் வெற்றிகரமாய் செய்து வருகிறார். இந்த முக்கியமான காரணத்திற்காகவே இது போன்ற குற்றசாட்டுக்களை நான் எதிர்க்கிறேன்.

4. இதற்கு மேல் வேறு எதையும் விளக்க அவசியம் இருப்பதாக தெரியவில்லை. இவரை பற்றி மேலே எழுத மாட்டேன் என்பது என் சுயவசதியை - தேவை என்று நான் நினைப்பதை- முன்னிட்ட ஒரு தீர்மானமே ஒழிய உறுதிமொழி அல்ல. வலைப்பதிவு உலகில் இவர் ஏதோ இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டது போல் தோற்ரமளிக்கலாம். இவரது ஈடுபாடு சமீப காலத்தியது, போலியானது என்பது இலக்கியத்தில் தீவிர ஆர்வம் உள்ள யாருக்கும் புரியும். வெறும் அச்சு பிச்சு கருத்துக்களை மட்டும் முன்வைத்துவிட்டு, 'ஆய்வு கட்டுரை எழுதியுள்ளாயா?' என்று மற்றவரை கேட்கும் இவர் கேள்வி கூட ஜெயமோகனிடன் கடன் வாங்கியது. இவர் போலியாய் உச்சரிக்கும் 'இன்ஷா அல்லாஹ்' கூட சொந்த சரக்கு கிடையாது. இதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் இலக்கியத்தின் எதிரி இலக்கிய ஆர்வம் உள்ளவனாய் தோற்றமளிப்பதற்கு எதிராக மட்டுமே இதை சொல்லுகிறேன். இந்த விவகாரம் குறித்து மேலே எதுவும் சொல்லும் உத்தேசமில்லை. சென்ற பதிவில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

Post a Comment

19 Comments:

Blogger SnackDragon said...

//அதை சொல்லலாம் என்று வந்த போது விசிதா குறித்து சிவக்குமார் எழுதியதை படிக்க முடிந்தது. அடடா, நான் இதுவரை இவர் பற்றி சொன்ன கருத்தை எல்லாம் இதை விட வேறு எந்த விதத்தில் நிறுவ முடியும்? ஹிபாக்கரஸி என்பதன் உரைகல் இவர்தான்! அலுத்து போனாலும் சொல்லத்தான் வேண்டியுள்ளது. இப்படியும் வெட்கம் கெட்ட ஒரு உதாரணம் நிச்சயமாய் வேறு ஒன்று கிடைக்காது.//

:-))

6/21/2005 10:59 PM  
Blogger Thangamani said...

வாங்க, வாங்க!!

6/22/2005 11:54 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

கலக்கல் ரோசாவசந்த்!!!
மயிலாடுதுறை சிவா...

6/22/2005 1:26 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

ரோசா,
Back with a Bang, as expected ;-)

பார்க்கவும்:
http://balaji_ammu.blogspot.com/2005/06/book-meme.html

வாசித்ததைப் பதிக்கவும். நன்றி !

6/22/2005 3:28 PM  
Blogger ROSAVASANTH said...

கார்திக், சிவா கருத்துக்கு நன்றி.

தங்கமணி உங்களின் பதிவுகளைத்தான் அதிக நேரம் எடுத்து படித்து கொண்டிருந்தேன். புத்தகம் பற்றி எழுத என்னை அழைத்ததற்கு நன்றி.

பாலா, கருத்துக்கும் எனக்கு விடுத்த அழைப்பிற்கும் நன்றி. இப்போதுதான் ஒரு 4 மணி நேரம் வலைப்பூக்களில் மேய்ந்து பல பதிவுகளை படித்தேன். ஏற்கனவே பல பதிவுகளில் நான் குறிப்பிட விரும்பிய புத்தகங்களையும் குறிப்பிட்டாகவிட்டது. சுமுவும் குறிப்பிட்டது போல், மீண்டும் ஒரு பதிவு அலுத்து போகக் கூடும். அதனால் உடனே இல்லாமல் வேறு ஒரு சமயத்தில் என் வாசிப்பனுபவத்தை எழுதுகிறேன். உங்கள் அழைப்பிற்கு மீண்டும் நன்றி.

6/22/2005 6:34 PM  
Blogger Vijayakumar said...

வாங்க அண்ணாச்சி. எப்படியிருக்கீங்க? பையன் என்ன பண்றான்?

கழுதைபுலி மேட்டரை விட மாட்டீங்க போலிருக்குதே? :-)))

6/22/2005 6:56 PM  
Blogger ROSAVASANTH said...

விஜய், விசாரிப்புக்கு நன்றி.(அதென்னய்யா விரல் சூப்பிகிட்டு படம்?! உம்ம பிள்ளை நாபகமோ?). பையன் நல்லா இருக்கான்.

கழுதைபுலி பற்றி எழுதும் ஆசை எனக்கு இம்மி கூட கிடையாது. சில பச்சையான புளுகுகளை மறுக்க மட்டுமே, எழுத வேண்டிய கட்டாயம் வந்தது. வேறு வழியில்லாமலே எழுதப்பட்டது. வாசித்தவர்களிடம் அதற்கு மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.

6/22/2005 7:00 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

நன்றி மீள்வரவு ரோசவசந்.சிறுபத்திரிகைகளின் நெடுநாள் வாசகராக நீங்கள் படித்தவற்றை அறிமுகப்படுத்துங்களேன்.

6/22/2005 7:59 PM  
Blogger Vijayakumar said...

//(அதென்னய்யா விரல் சூப்பிகிட்டு படம்?! உம்ம பிள்ளை நாபகமோ?). //

குழந்தை மனசு தான் போயே போச்சே. அட்லீஸ்ட் குழந்தை மாதிரி அப்பப்போ வேஷம் கட்ட பிடிக்கும் (ஸ்பிலிட் பெர்சனாலிட்டி எல்லாம் இல்லீங்க). டவ்சர் போட்டுட்டு குடுமி வச்சி கைசூப்பி கிட்டு குழந்தையோட குழந்தையா போட்டோவிலயாச்சி இருப்போமேன்னு தான். கண்டுக்காதீங்க.

6/23/2005 4:38 PM  
Blogger ROSAVASANTH said...

சரி விஜய், உங்க குழந்தை மனசை பாராட்டுகிறேன். கருத்துக்கு நன்றி!

6/23/2005 5:26 PM  
Blogger ROSAVASANTH said...

ராகாகியில் நான் எழுதிய சில மடல்களை இங்கே ஒரு பதிவிற்காக போட்டு வைக்கிறேன்.நான் எழுதியதை மட்டுமே பதிகிறேன். கார்திக், திருமலை, நடராஜன் போன்றவர்கள் எழுதியதை அவர்கள் அனுமதியில்லாமல் பதியமுடியாது, அனுமதி கேட்கும் வேலைகளில் இறங்க நேரமில்லை. அதனால் அவர்கள் எழுதியதை நேராக ராகாகி சென்று (http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/) NOT A WORD IS WRITTEN BY THE INTERVIEWEE ! - ASHOKAMITRAN என்ற இழையில் உள்ளதை படிக்கவும். அவசரமாய் அடித்ததால் வரும் எழுத்துபிழைகளை மன்னிக்கவும். அதை நான் சரி செய்ய முயலவில்லை.


1. கார்திக்கும் திருமலையும் அடித்துகொண்டதை என்னால் முழுமையாய் படிக்க
முடியவில்லை. படிக்கப்போவதும் இல்லை. நேரமின்மை மட்டும் இதற்கு
காரணமில்லை.

அரைகுறையாய் முடிந்தவரை மேய்ந்ததில் பெரியாரை பற்றி வழக்கமாய்
சொல்லப்படும் "பாம்பையும் பாப்பானையும்.." வசனம் குறித்து திருமலை
'ஆதாரபூர்வமாய்' ஏதோ பேசியதாக தெரிகிறது. பெரியாரை ஓரளவு
விரிவாய் வாசித்துள்ள, அவருடைய பேச்சை கேஸட்டில் கேட்டுள்ள, நான்
இதுவரை பெரியார் பேசியதாய் பலரால் சொல்லப்படும் இந்த வசனத்தை அதன்
contextஉடன் வாசித்ததில்லை. யாரும் *நேரடியாய்* மேற்கோள் காட்டி
படித்ததும் இல்லை. ஞாநி திண்ணையில் ஒருமுறை பெரியார் அப்படி நேரடியாய்
எதையும் சொல்லவில்லை என்றும் சொல்லியுள்ளார். ஆகையால் என்னுடைய
தனிப்பட்ட தகவலுக்கும், புரிதலுக்கும், திருமலை தயை கூர்ந்து இது குறித்த
ஆதாரத்தையும், அதன் சந்தர்பத்தையும், மொட்டையாக இல்லாமல் நேரடியான
மேற்கோளாய் (உதாரணமாய் பெரியாரின் மொழி நடையுடன் நன்கு
பரிச்சயமுள்ள எனக்கு 'பார்பனர்கள் வீடுகளை கொளுத்தவேண்டும்' என்பதான
மொட்டையான மேற்கோள் உண்மையான மேற்கோளாய் படவில்லை. அப்படி
மொட்டையாய் இல்லாமல் ஒரு பத்தியாகவாவது, குறைந்த பட்சமாய் அதனுடன்
சேர்த்த சில வரிகளுடனாவது) இங்கே அளித்தால் பயனுள்ளதாய் இருக்கும்.,

இது எனது என் சுயபுரிதலை முன்னிட்டு தனிப்பட்ட வேண்டுகோள் மட்டுமே.
திருமலை ஏற்கனவே இதை செய்திருந்தாலும், மீண்டும் இந்த வேண்டுகோளிற்கு
பதிலாய் வெட்டி ஒட்டினாலோ, அல்லது புதிதாய் எழுதினாலோ
நன்றியுடையவானாய் இருப்பேன். நன்றி.

ரோஸாவசந்த்.

2. திருமலையின் பதிலுக்கு நன்றி.

//நான் அளித்த பின் அதையும் கண்டக்ஸ்ட் ஒட்டியில்லை என்று சொல்லப் படக்
கூடும் என்பதை அறிந்த பின்பும் கூட கேட்கப் பட்ட மொட்டையாய் இல்லாத
ஆதாரங்களை அளிக்கிறேன். //

திருமலை என்ன வகையான ஆதாரம் அளிக்கிறாரோ அதன் அடிப்படையிலேயே
கண்டக்ஸ்ட் ஒட்டியுள்ளதும், ஒட்டாததும் பற்றி பேசமுடியும். ஆனால்
ஆதாரமில்லாமல் பேசியதாக நான் திருமலையை குற்றம் சொல்லி என் மடலை
எழுதவில்லை. அவர் மீது குற்றம் எதையுமே கூட சொல்லவில்லை. ஏனெனில்
பெரியார் எதிர்பாளர்கள் மட்டுமல்ல, ஆதரவாளர்களாலும் இது உண்மை என்று
எடுத்துகொள்ளப்பட்டே பல இடங்களில் பேசப்பட்டு வருகிறது. என் சுயதேவையை
முன்னிட்டு ஒரு உதவியாக மட்டுமே கேட்டேன்.

இப்போதைக்கு நேரடி ஆதாரங்கள் (திருமலையோ, மற்ற யாருமோ) தராத
நிலையில் இது குறித்த என் அறிவை முவைக்கிறேன். பெரியாரின் பல
'குண்டக்க மண்டக்க' வாக்கியங்களை, ஒரு கட்டத்தில் அவர் எதிரிகளால்
தங்கள் வசதிக்கு ஏற்பவும், அவர் 'சிஷ்யர்களாலும்' தங்கள் வசதிக்கு
ஏற்ப(தர்ம சங்கடத்துடனும்) முன்வைக்கப்பட்டு, அதை நேரடியாக படிக்கும் போது
மட்டுமே அது குறித்த பெரியாரின் பார்வையை புரிந்துகொள்ள முடிகிறது.
உதாரணமாய் 'தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாசை' என்றது. rss தொடங்கி
அவரின் எதிரிகளால் பல விதங்களில் திரிக்கப்பட்டும், அவர் சிஷ்யர்களால்
தர்மசங்கடத்துடனும் முன்வைக்கப்பட்டதை அவரிடம் நேரடியாய்
அறிந்துகொண்டபோது அவர் மீதான மதிப்பு கூடியது. இதே போல சென்னை
நகரப்பிரச்சனை, (60களின்)ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அவர் எடுத்த
நிலைப்பாடு, அவரின் திருமணம் போன்றவை குறித்தும் சொல்லலாம். இதுபோல
பல விஷயங்களில் நேரடியாக பெரியார் சொன்னதை அறிய முடிந்திருக்கிறது.
இந்த 'பாப்பான்/பாம்பு' விஷயம் மட்டும் நான்
கேள்விபட்டதேயில்லை(பொத்தாம் பொதுவாய் பலரால் சொன்னதன்றி). இது
குறித்து விஷயம் தெரிந்ததாய் நான் நினைத்த யாராலும் சந்தர்பத்தை
குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. மொட்டையான மேற்கோளாக கூட யாரும்
எடுத்துக்காட்டி படித்ததும் இல்லை, வெறும் சும்மானாச்சுக்கும் சொல்வதாக மட்டுமே
இதைவரை அறிந்து வந்திருக்கிறேன். இந்நிலையில் 'பெரியார் இப்படி
சொன்னதே இல்லை' என்று ஞாநி சொன்னபின் நானும் அப்படி நினைப்பதற்கான
காரணங்களே அதிகம் உள்ளது. மேலும் 'பார்பனர் வீடுகளை கொளுத்தவேண்டும்'
என்பது போல, இதை ஒத்த எந்த வசனங்களையும் பெரியாரின் பேச்சுகளில்
எதிர்கொள்ள முடியது. நான் இதுவரை எதிர்கொண்டதில்லை. யாரும் மேற்கோள்
காட்டி படித்ததும் இல்லை. எல்லாமே அவர் பாணியிலான ஒரு நையாண்டி கலந்த
தர்கத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆகையால் என் தகவல் தேவையை
முன்னிட்டு திருமலையிடம் கேட்டேன். அதற்கு அவர் அளித்த பதிலுக்கு நன்றி.

பெரியார் மீது ஒரு குறிப்பிட்ட வயதுவரை எனக்கு இருந்த வெறுப்பு, குடும்ப
சூழல், என் பெற்றோர் மற்றும் சுற்றி இருந்தவர்கள் என்னிடம் விதைத்தது. அதை
மீறி பெரியார் மீது ஏற்பட்ட அபிமானம், அவர் எழுத்தை வாசித்தன் மூலம்,
விமர்சன பூர்வமாய் அதை அணுகியதன் மூலமாய் மட்டுமே, மேற்சொன்ன
காரணங்களுக்கு எதிராக ஏற்பட்டது. இதற்கு பின்னே வேறு எந்த காரணமும்
எனக்கு கிடையாது. அதனால் 'நேரடி ஆதாரம்' திருமலை தந்த பின்னும்
(ஒருவேளை அவர் அளித்தால்) 'அதையும் கண்டக்ஸ்ட் ஒட்டியில்லை ' என்று
சொல்ல எனக்கு காரணம் எதுவும் இல்லை. ஒரு ஜாக்கிரதை உணர்வில் முன்னமே
அவர் இதை சொல்லிவைத்தாலும், நான் இதை மற்றவர்களுக்காக சொல்கிறேன்.

ரோஸாவசந்த்.

3. வெட்டி விவாதத்தில் எனக்கு ஆர்வம் இல்லை. 'பாம்பையும் பாப்பானையும்
கண்டால், பாம்பை முதலில் அடி' என்று பெரியார் பேசியதாக பல இடங்களில்
மேற்கோள் காட்டப்படுகிறது. பெரியார் அப்படி நேரடியான வார்த்தைகளில்
சொல்லியிருக்க வாய்பில்லை என்று எனக்கு தோன்றுவதாலும், அது குறித்து என்
தேடலில் இதுவரை எந்த உருப்படியான ஆதாரமும், விவரமும் கிடைக்காததால்,
திருமலை ஏதோ ஆதரபூர்வமாக பேசியதாக தோற்றமளித்ததால் அது குறித்து
வினவினேன். பயனுள்ள தகவல் எதுவும் அவரிடம் (குறைந்த பட்சம் இப்போது)
இல்லை என்றே அறிகிறேன். மற்றபடி விவாதம் எதிலும், குறிப்பாய் இங்கே,
கலந்து கொள்ளும் ஆர்வம் இல்லை. அதற்கான இடமாக இதை நினைக்கவும் இல்லை.
என்னை நோக்கி வினவிய காரணத்தால் நடராஜன் கேட்டதற்கு சுருக்கமான
பதில்.

திகவின் ஊர்வலங்கள் எதிலும் நான் கலந்துகொண்டதில்லை. ஆனால் அது குறித்த
விபரங்களை துக்ளக் உள்ளிட்ட பத்திரிகைகளில் பல முறை படித்திருக்கிறேன்.
நான் வாசித்த வரையில் ஒருமுறை கூட நடராஜன் முன்வைத்த ""பாம்பையும்
பாப்பானையும் பார்த்தால் முதலில் பார்ப்பானை அடி" என்ற வசனத்தை
கேட்டதில்லை. நான் வாசித்த சில (பெரியாருக்கு பின்னான) திக
பிரசுரங்களிலும், தெருவோர பேச்சுகளிலும் கேட்டதில்லை. ஆனாலும் அதை
ஒத்த வசனங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்றே எனக்கு தோன்றுகிறது.
உதாரணமாய் "RSS போர்வையில் ஆரிய பாம்புகள்" அல்லது "பார்பன
பாம்புகள்" போன்ற வசனங்கள் உண்டு. இது தவிர இன்னும் பல, எனக்கு உவப்பு
மற்றும் ஒப்புதல் இல்லாத வசனங்களும் உண்டு. நானே கேட்டிருக்கிறேன்.
ஆதாரங்கள் தேவையில்லை.
நிச்சயமாய் " "கடைசி பூனூல் இருக்கும் வரை கருப்புச்சட்டை ஓயாது." என்ற
கோஷம் அல்லது அதை ஒத்த வசனம் இருந்திருக்கும். அதில் எனக்கு ஆட்சேபணையும்
எந்த பிரச்சனையும் இல்லை. நான் கருப்பு 'சட்டைகாரனாக' மட்டும் என்னை
அடையாளப்படுத்தி கொள்ளவில்லையெனினும், கடைசி பூணுல் இருக்கும்வரையிலும்
கருப்புசட்டையும் இருக்க வேண்டிய அவசியத்தை அங்கீகரிக்கிறேன்,
ஆதரிக்கிறேன். நடராஜனுக்கு அதில் என்ன பிரச்சனை என்று அறிந்து
கொள்ளவேண்டிய தேவை எனக்கு இல்லை.

திக ஊர்வலத்தில் ""பாப்பாத்தியை தேசியமயமாக்கவேண்டும்" என்ற வசனம்
ஒலித்ததை நான் கேள்விபடவில்லை எனினும், அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது
என்றே நினைக்கிறேன். ஆனால் இவற்றிற்கான "பெரியார் அவர்களின் மறுப்பு,
கண்டனம், உடன்பாடு அல்லது விளக்கம்" பற்றி ஏன் கேட்கிறார் என்று
புரியவில்லை. பெரியார் இறந்தபின்னான, ஜெயலலிதாவுடன் வீரமணி கூட்டு
சேரும் முன் ஒரு ஊர்வலத்தில் இது ஒலித்திருந்தால் பெரியார் அது குறித்து
விளக்க வாய்பிருக்காது என்பதை நடராஜனும் அறியக்கூடும். அவர் காலத்தில்
என்றால் நான் அறிந்து அப்படி எதுவும் ஒலித்திருக்க வாய்ப்பிருப்பதாக
தோன்றவில்லை. இந்திராகாந்தி போன்ரவர்களை பெரியார் எத்தனை
மரியாதையுடன் விளிப்பார் என்பதை அவர் பேச்சுகளில் கேட்டிருக்கிறேன்,
வாசித்திருக்கிறேன். பெரியார் இயக்கத்தின் வெகுஜன பலத்தை(அதன்
உச்சத்தை 70களில்) அறிந்த யாரும், அதிலிருந்து வெளிப்பட்ட (மிஞ்சி
மிஞ்சி போனால் சில பூணுல் அறுப்புகளாக) வெளிப்பட்ட வன்முறையை கடந்த
பத்து ஆண்டுகளில் மட்டும் இந்துத்வம் வெளிப்படுத்திய ரத்தகளறியுடன் ஒப்பிட்டு
பார்க்கலாம்.

ஆனால் ஒன்று, ஊர்வலமே தேவையில்லாமல் அக்கிராகார தெருக்களில்
மட்டுமில்ல்லாமல், பஸ் எலெக்ட்ரிக் ட்ரெயின், லஸ் கார்னர் என்று பல
இடங்களில் தீண்டாமையை நியாயபடுத்தும் வசனக்களை கேட்டிருக்கிறேன்.
திருநெல்வேலியில் கோபால்ஜி போன்ரவர்கள் நேரடியாக வெறுப்பு பேச்சை
இன்றும் பேசிவருவதை அறிகிறேன். 80 களில் எழுச்சி பெற்ற பிராமண சங்க
ஊர்வலத்தில்-திருநெல்வேலியில்- பெரியாரை பற்றிய ஆபாச கோஷங்களை
கேட்டிருக்கிறேன். வி.எச்.பி பல பிரசுரங்களில் வருணாசிரம தர்ம்மமும்,
மனுதர்மமும், அவரவர் அந்தந்த இடங்களில் இருக்க வேண்டியதன் அவசியத்தையும்,
அதன் பிரழ்வையே இன்றய சீரழ்விறகான காரணமாகவும் சொல்லபட்டிருப்பதை,
செப்டம்பரில் இந்தியா செல்லும் போது, பிரதி எடுத்து தரமுடியும்.
அவற்றினுடம் ஒப்பிடும் போது திக சொன்னதாக சொல்லப்படும் வசனங்கள்
எனக்கு பெரிய பிரச்சனையாக தெரியவில்லை.

என் ஆர்வம் பெரியார் இது குறித்து பேசியது குறித்து அறிவது மட்டுமே.
மற்றபடி விவாதத்தில் ஈடுபடும் சிரமத்தை நடராஜன் எடுத்துகொள்ள வேண்டாம்.
எனக்கு அதில் ஆர்வம் இல்லை. ஆனால் என்னிடம் தெளிவு ஏதாவது கிடைக்கும்
என்ற நம்பிக்கையில், என் கருத்தை அறிய வினவினால் நிச்சயம் பதில்
சொல்ல முடியும். நன்றி.

குமார் பெரியார் பற்றி எதுவும் சொன்னதாக தெரியவில்லை. எனினும்
கருத்துக்கு நன்றி.

ரோஸாவசந்த்.

4. திருமலை நான் எழுதியுள்ளதை திரித்திருப்பதாலும், சில புளுகு காரணமாகவும்
மீண்டும் எழுதுகிறேன்.

அதாவது அவர் 'அவர்கள்' என்று குறிப்பிட்டு பேசுவது என்னையும், இந்த
சந்தர்பத்தில் என்னை மட்டுமே குறிக்கிறது. அவர் சொல்வது போல் நான்
எதற்கும் வீடியோ/ஆடியோ ஆதாரம் கேட்கவில்லை. மாறாக நடராஜன் சொன்ன
பல விஷயங்கள் உண்மையாய் இருக்க வாய்ப்பு இருப்பதாகவே
சொல்லியிருக்கிறேன். அவர் என்னை கேட்டதால் அது குறித்து நான்
அறிந்தவற்றை சொல்லியிருக்கிறேன். மேலும் 'ஈவேரா
இனவாதியா(வெறியறா?)' என்ற விவாதத்தில் ஈடுபடவில்லை. மாறாக
அவரை 'இனவெறியன்' என்ற வார்த்தையால் திருமலை போன்றவர்கள்
வர்ணிப்பதை முழுமையாய் ஏற்றுகொண்டு, அதை பெரியாருக்கு கிடைத்த சிறந்த
சான்றிதழாகவே பார்கிறேன். அதாவது நடராஜன் சொன்னதற்கு எதிராக,
கோவில் வாசல் தொடங்கி, நான் கேட்டதாகா சொன்ன பல விஷயங்களை
நிச்சயம் திருமலை கேட்டிருப்பார். தன் குடும்பத்தில், குறைந்த பட்சம் தன்
சுற்றத்தில், தெருவில் ஒரு கல்யாண நிகழ்விலாவது கேட்டிருப்பார். அது
குறித்த எந்த விமரசனமும் இல்லாத, தன் அடையாளத்தை (திரித்து
வளைக்கப்பட்ட) தர்கத்தின் மூலம் உரசி உரசி உறுதி படுத்திகொள்ளும், தன்
இனநலம் சார்ந்த எல்லாவற்றையும் நியாயபடுத்தி வரும் ஒரு இனவெறியன்
பெரியாரை 'இனவெறியன்' என்று சொல்வதை போன்ற பாராட்டு கிடையாது.
அதனால் திருமலை சொன்ன எதையும் நான் மறுக்கவில்லை. அவரிடம் கேட்டது
ஒரு தகவல் மட்டுமே.

திருமலை (எல்லோரும் அறிந்த வகையில்) மிகைப்படுத்தி விவரிக்கும்
நிகழ்ச்சிகள் யாவையும் கூட நான் மறுக்கவில்லை. ஆதாரம் கேட்கவில்லை.
அதற்கும் வாய்ப்பு இருப்பதாக(அதாவது அவர் மிகைபடுத்தி விவரிப்பது போல்
அல்லாமல், ஒரு தினமலர் பாமகவின் தாக்குதலை விவரித்தால் அதில் நாம்
சிலவற்றை உண்மையென்று எடுத்துகொள்வோமல்லவா அதுபோல)வே
நினைக்கிறேன். பார்பனியம் போன்ற பாசிசத்தை எதிர்க்கும் இயக்கத்தில்
வெறுப்பின் நிழலே இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. உலகில் அப்படி எந்த
இயக்கமும் கிடையாது. ஒரு எதிர்ப்பியக்கத்தில் வெளிப்படும்
antagonisஅத்தை முன்வைத்து அதை நிராகரிக்க வேண்டுமானால், எதுவும்
தங்காது. அந்த வகையில் பெரியார் இயக்கத்திடமிருந்த வெளிப்படது மிக
குறைந்த வன்முறை என்பது மட்டுமே என் வாதம். அதை பொதுவாய் நடராஜனுக்கு
சொன்னேன். கடந்த பத்து ஆண்டுகாலத்தில் இந்துத்வம் வழங்கிய ரத்த களரி,
இன்னும் உலகை 'உய்விக்க' வந்த கம்யூனிஸம் வெளிப்படுத்திய வன்முறையுடன்
ஒப்பிட்டால், அதைவிட முக்கியமாய் பார்பனியம் காலம் காலமாய்
நிகழ்வேற்றியுள்ள கருத்தியல் மற்றும் சமூக வன்முறையுடன் ஒப்பிட்டால் இது
ஜுஜுபி.

நான் தகவல் கேட்டது பெரியார் பற்றி மட்டுமே. திருமலை சொல்வது போல்
அல்லாமல் பெரியார் பேசிய எழுதிய அனைத்தும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.
எதையும் ஆதரபூர்வமாய் தெளிவாக்கி கொள்ளமுடியும். (நான் அதை செய்யும்
படி திருமலையை வற்புறுத்தவில்லை. ஏதோ அவர் ஆதாரம் தந்தபின்னும் நான்
சொல்வதையே சாதித்துகொண்டிருக்க நான் அவரிடம் சவால் விடவும் இல்லை,
விவாதிக்கவும் இல்லை. கேட்டது ஒரு உதவி மட்டுமே!)

திருமலை சொல்வது போல் "பார்ப்பனன் இந்த நாட்டிலிருந்து விரட்டப் பட
வேண்டும் என்று 29/1/54 விடுதலை இதழில் எழுதியுள்ளார்" என்பது உண்மையாய்
இருக்க வாய்பில்லை. பெரியார் இது போல் தொனிக்க பேசியது கிடையாது.
29/1/54 என்று திகதி போடுபவர் முழு பத்தியையும் கொடுப்பதில் என்ன
பிரச்சனை? 'பார்பனர்கள் தங்கள் நிலையிலிருந்து கீழிரங்க வேண்டும் என்பது
கூட எங்கள் நோக்கம் கிடையாது' என்று பெரியார் பலமுறை பேசியுள்ளார்.
திண்ணையில் ராஜன்குறை கட்டுரையில் திகதி, பேசிய இடம், முழு பத்தியுடன்
இதற்கு ஆதாரம் உள்ளது.

"கடவுளை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பனை ஒழிக்க வேண்டும் " என்பதை
போல நிச்சயம் சொல்லியிருப்பார். ஆனால் என் புரிதலின் படி இப்படி
சொல்லியிருக்க வாய்பில்லை. திருமலை திரித்திருக்க காரணம் எதுவும்
இல்லாவிட்டாலும் தவறுதலாய் வந்திருக்கலாம். "பாப்பானை ஒழிக்க கடவுளை
ஒழிக்க வேண்டும்" என்பதாக பெரியார் சொல்லியிருக்க கூடும்,
சொல்லியிருக்கிறார். பெரியாரின் கடவுள் மறுப்பு பார்பனிய எதிர்பின்
மீது கட்டப்பட்டதே ஒழிய கடுவுள் மறுப்பிற்காக பார்பனிய எதிர்ப்பை அவர்
கைகொள்ளவில்லை. அதனால் இந்த வகையில்தான் அவர் சொல்லியிருக்க
வேண்டும். மேலும் '9/10/58'இல் மட்டுமில்லாமல் பலமுறை 'பாப்பான் ஒழிய
வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார். அதை பாப்பானை அடித்து ஒழிக்க
வேண்டும் என்பதாக திருமலை கொள்ள முடியும். ஆனால் பெரியார் 'சூத்திரன்
ஒழிய வேண்டும்' இன்னும் 'பறையன் ஒழியவேண்டும்' என்று கூட
சொல்லியிருக்கிறார். 'பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம்
ஒழியாது' என்றும் சொல்லியிருக்கிறார். 'பாப்பான் ஒழியாமல் சூத்திரன்
ஒழிக்க முடியாது' என்றும் சொல்லியிருக்கிறார்.

கடைசியாக "சாதி பாகுபாடுகள் ஒழிப்பதற்கு அரசியல் சட்டம்,
காந்தியார், நேரு படங்களைக்
கொளுத்த வேண்டும். இவ்வத்தனை முயற்சிகளிலும் பலன் கிட்டாமல் தோல்வி கி
டைக்குமானால் பிறகு பார்ப்பனர்களை அடிக்கவும், உதைக்கவும்,
கொல்லவும், அவர்கள் வீடுகளைக் கொளுத்தவுமான காரியங்கள் நடை பெற
வேண்டும்" என்று (ஏனோ தேதி போடாமல்) திருமலை சொல்வது பச்சை பொய்
மட்டுமே. இப்படி இந்த வரிகளை பெரியார் சொல்லியிருக்க /எழுதியிருக்க
வாய்ப்பே இல்லை. தலையணை சைஸில் உள்ள பெரியாரின் தொகுப்புகள் ஒன்றில்
கூட இத்தகைய ஒரு வரியை, இதை ஒத்த ஒரு வரியை நான் கண்டதில்லை. இது
திருமலையின் புளுகு மட்டுமே. முடிந்தால் பெரியார் பேசியதை முழுவதும்
மேற்கோள் காட்டட்டும்.

பெரியார் வன்முறைக்கு நேரடியாய் அழைப்பு விடுத்த ஒரே தருணம் ராஜாஜியின்
'குலக்கல்வி' குறித்த எதிர்ப்பில் மட்டுமே. (திருமலையின் மேற்படி
மேற்கோள் இந்த சந்தர்பத்திலெனில், அதை அந்த சூழலுடன் வைத்தே பார்க்க
முடியும்.) அதுவும் வருடக்கணக்கான போராட்டங்கள் பலனளிக்காமல் போனதால்
கடைசி ஆயுதமாய் மட்டுமே வன்முறையை கையில் எடுத்தார். பெரியாரின்
இறப்புக்கு பிந்தய திக போல் அல்லாமல், அவர் காலத்தில் அவருக்கு பரவலான
வெகுஜன ஆதரவும் உண்டு. ராஜாஜி ஆட்சி காலத்தைவிட 70இல் திமுக
அலையும், பெரியாருக்கான ஆள்பலம் மட்டுமின்றி, அரசும் அவர் பக்கம்
இருந்தது. எத்தகைய வன்முறையிலும் அவரால் இரங்கியிருக்க முடியும். மாறாக
அவரால் கடைசியாய் களத்தில் புகுந்த 'கருவறை நுழைவு' போராட்டத்தில் கூட
வெற்றி பெறமுடியவில்லை. பரிதாபமாக அவர் அதில் தோல்வி கண்டதுடன்,
இன்றுவரை கூட திகவால் அதில் ஒரு அடிகூட நகர முடியவில்லை. பெரியார்
கருவறையில் நுழையப் போவதாய் அறிவித்து, கருணாநிதி அதன் விளைவையும்
தன் ஆட்சியையும் குறித்து பயந்து, அவரே சட்டம் கொண்டுவந்து, பெரியாரும்
அதை ஏற்று(இதுதான் அவர் காட்டிய வன்முறை) பின்னர் சுப்ரீம் கோர்ட்
கருணாநிதி கொண்டுவந்த அனைவரும் அர்சகராகும் சட்டத்தை ஒன்றும்
இல்லாமலாக்கியது. எல்லாம் சாதகமாய் பெரும் பலத்துடன் இருந்த காலத்தில்
அவர் செய்த ஒரே விஷயம் ஒரு எதிர்வினையாய்(மேல்விபரத்திற்கு என்னை
அணுகலாம்) ஒரு குறியீடாய் ராமர் படத்தை செருப்பால் அடித்தது மட்டுமே!
(அதை நான் கண்டிக்காவிட்டால் இனவாதி என்று யாராவது நினைக்கலாம்,
அதானால் சொல்கிறேன். அதை ஒரு மாபெரும் வறலாற்று நிகழ்வாக
பார்கிறேன்.)

'ஒப்புகொள்ளவா போகிறார்கள்' என்று திருமலை போல நான்
அங்கலாய்ப்பதில்லை. எல்லாவகை பாசிசத்திற்கும் (தமிழை முன்வைத்த
பாசிசத்திற்கும்) எல்லாவகையிலும் எதிரான ஒருவனை, காலகாலமாய் தன்
இனம் நிகழ்த்திவரும் வன்முறையை எல்லாம் மாறி மாறி நியாயபடுத்தி வரும்
ஒரு இனவெறியன், எப்படி எதிர்கொள்வ்பான் என்று எனக்கு நன்றாகவே
தெரியும்.

ஜீவாவின் பேச்சை நானும் கேட்டான். கலமெல்லாம் திட்டிவிட்டு இப்படிபட்ட
சந்தர்பங்களில் ஜீவா போன்ர கம்யூனிஸ்டுகள் பேச்சை இவர்கள் மேற்கோள்
காட்டுவது சுவாரசியமானது. கம்யூனிஸ்டுகள் (ஜாதி குறித்த அவர்களின்
பார்வ்வை) பற்றி இதைவிட கடுமையாய் விமர்சனம் இருக்கிறது. அதையெல்லாம்
எடுத்து போட்டு மாளாது. காலம் அதை உறுதியும் படுத்தியிருக்கிறது. அதற்கு
ஜீவாவின் பேச்சு இன்னொரு ஆதாரத்தை தருகிறது, அவ்வளவே!

இந்த மடலுடன் நான் இந்த இழையில் எதையும் படிக்கவும் எழுதவும்
மாட்டேன்.(குறைந்த பட்சம் உடனடியாக). வேலை நெருக்கடி முக்கிய காரணம்
என்றாலும், இதனால் பயனிருக்க போவதில்லை எனபதே முக்கிய காரணம்.
(அப்பறம் ஏன் வந்தாய் என்று அசட்டுத்தனமாய் கேட்ககூடாது. இது போல சிறு
இடையீடு செய்வதும், அதன் trapஇல் மாட்டிகொள்ளாமல் கழண்டு கொள்வதையும்
ஒரு நல்ல அணுகுமுறையாகவும், அதை முடிந்தவரை பின்பற்றுவதுமாகவும் நான்
இருக்கிறேன்.) யாருக்கேனும் என்னிடம் ஏதாவது அறியதரவோ, அறியவோ
ஆர்வம் இருந்தால் என் வலைப்பதிவில் அதை செய்யலாம்.
http://rozavasanth.blogspot.com/

ரோஸாவசந்த்.

6/23/2005 5:27 PM  
Blogger Thangamani said...

ரோசா, இவர்கள் தாம் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே செய்கிறவர்கள். எந்த உண்மையான செய்தியின் அடிப்படையிலோ, அல்லது அவர்களது மனச்சான்றின் அடிப்படையிலோ கூட அல்லாது வெறும் சாதிய வெறுப்பு, அடிமைப்படுத்தும் மனப்பான்மை, சமத்துவம், சாதியற்ற தன்மை, பெண்ணுரிமை இவைகளின் பால் கொண்ட அதியுச்ச வெறுப்பு இவைகளால் உந்தப்பட்டே இவர்கள் கிடைத்ததையும், தோன்றியதையும் சொல்லிவருகின்றனர். ஆதலினால் இவர்களுக்கு உண்மையான எந்த செய்திகள் சொல்லியும் பயனில்லை. ஆனால் இவர்களது தொடர்ச்சியான இந்த பொய்யும், புனைச்சுருட்டும் கலந்த இந்த பிரச்சாரத்தால் மற்றவர்களும் பாதிக்கப்படும் இடத்தே உங்களது எதிர்வினைகள் பயன்படும். மிக்க நன்றிகள்.

6/23/2005 7:06 PM  
Blogger ROSAVASANTH said...

தங்கமணி, நீங்கள் சொல்வது சரி.

இந்த 'பாம்பு/பாப்பான்..' பெரியார் ஆதரவாளர்களாலும் கூட உண்மை என்பதாக எடுத்துகொள்ளப்பட்டே வருவதால் அது குறித்து மட்டும் வினவினேன்(எனக்கு இன்னும் இது குறித்த முற்றான முடிவு இல்லை.)

இது போன்றவற்றிற்கு அவ்வப்போது சின்ன எதிர்வினையை வைத்து விட்டு, புத்திசாலைத்தனமாய் கழண்டுகொள்வது ஒரு நல்ல அணுகுமுறை என்பதாய் தோன்றுவதால் எழுதினேன். மற்றபடி நீங்கள் சொல்வது போல் அறிந்தே செய்கின்றவர்க்ளிடம் பேசி பயனில்லை என்றாலும் இது போன்ற இடையீடுகளுக்கு ஏதோ ஒருவகையில் பயனுண்டு என்று நினைக்கிறேன்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

6/23/2005 7:14 PM  
Blogger SnackDragon said...

/ திருமலை நான் எழுதியுள்ளதை திரித்திருப்பதாலும், சில புளுகு காரணமாகவும்
மீண்டும் எழுதுகிறேன்./
பெருமைக்காக சொல்லவில்லை, இந்த கருத்தை வந்தடைவீர்கள் (நான் எழுதியதை காப்பி கிளப்பில் வாசிக்கவில்லை என்றாலும்) என்று முன்பே எண்ணியிருந்தேன்.நானும் எழுதப்போய், "ரோசவசந்து" கார்த்திக்கின் சீடர் என்றோ, அல்லது சாருநிவேதிதா ரோசாவசந்தின் சீடர் என்றோ ஏதாவது பட்டம் கிடைக்கும் என்பதால் தவிர்த்துவிட்டேன். அல்லது இவர்கள் எல்லாம் ஒரு கும்பல் என்பது போல் ("அவர்கள்" என்று மரியாதையோடு) பட்டம் கிடைக்கும் என்பதும் ஒரு காரணம்.

திருமலை தனக்கு அவசியப்படும்போது , பெரியாரின் பேச்சுக்கு போயிருந்தேன் என்பார். பெரியார் காலத்து பிராமணியம் பற்றி வாயை என்ன கண்ணை கூட திறக்கமாட்டார். :-(

கடைசியில் ஒன்று, "ரோசாவசந்து என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று திருமலை எழுதும்வரைக்கும் விவாதம் செய்யலாம் என்ப்து என்று தனிப்பட்ட புரிதல். :-)

//அவ்வப்போது சின்ன எதிர்வினையை வைத்து விட்டு, புத்திசாலைத்தனமாய் கழண்டுகொள்வது ஒரு நல்ல அணுகுமுறை என்பதாய் தோன்றுவதால் எழுதினேன்.//


ஆகக் கடைசியாக இது சரி என்று படுகிறது. அவசியம் என்றும் படுகிறது.

6/23/2005 11:03 PM  
Blogger ROSAVASANTH said...

கார்திக் கருத்துக்கு நன்றி. நீங்களும் திருமலையும் போட்ட சண்டையை அப்படி இப்படி படித்தேன். முழுவதும் மொத்தமாய் படிக்க மிகுந்த சோர்வாய் இருந்தது.

ஈழநாதன், மறந்து விட்டது. உங்கள் வரவேற்பிற்கு நன்றி. ஆனால் நீங்கள் நினைப்பது போல் நான் நெடுநாளைய சிறுபத்திரிகை வாசகன் அல்ல. நெடுநாளைக்கு முந்தய வாசகன் மட்டுமே. நான் சிறுப்த்திரிகைகள் படிப்பதை விட்டு 8 வருடங்கள் ஆகப்போகிறது. ஒரு 2, 3 வருடங்களுக்கு தீவிரமாய் வாசித்தேன். எனினும் பின்னர் என் வாசிப்பு குறித்து இங்கே எழுதுகிறேன். நன்றி.

6/23/2005 11:12 PM  
Blogger SnackDragon said...

/(நான் எழுதியதை காப்பி கிளப்பில் வாசிக்கவில்லை என்றாலும்)//
ரோசா நான் எழுதியதை காப்பி கிளப்பில் வாசிக்கமலே கூட இக்கருத்துக்கு வந்தடைவீர்கள் என்று சொல்ல வந்தேன். :-)

6/23/2005 11:21 PM  
Blogger ROSAVASANTH said...

சுந்தர வடிவேலின் பதிவில் பதிந்தது. ஒரு பதிவுக்காக இங்கே. கீழே உள்ளது எனது நண்பர் ஒருவரிடமிருந்த (பலருக்கும் அனுப்பி வைக்கும் வேண்டுகோளுடன்) வந்த ஒரு மின்னஞ்சல். தெளிவுக்காக, இதை எழுதியது நான் அல்ல.

Please boycott Coco Cola, Pepsi ....

Noted human rights' activist Sandeep Pandey severely beaten up by Coca
Cola security

Shame on the Government : Instead of protecting public interest, they
are
more of vanguards of corporations!!!

Today in Mehndiganj Varanasi, noted social activist and recepient of
Ramon
Magsaysay Award 2002 Dr Sandeep Pandey was severely beaten up by
security
personnels of COCA COLA and Varanasi police when he was staging a
peaceful
protest demonstration outside Coca Cola bottling plant.

It is indeed a matter of shame and disgust that our Government agencies
protect and promote the interest of multinational corporations and turn
a
blind eye to the interest and welfare of common people.

Sandeep Pandey's right toe received heavy impact injuries when security
personnel banged an iron rod on it. Sandeep has received many lathi
injuries on his back apart from a head injury from a rifle butt.

National convenor of NAPM (National Alliance of People's Movement)
Sandeep
Pandey was staging a peaceful demonstration against Coca Cola company
for
misleading our people and trampling over their welfare. Coca Cola has
been
taking out more than 150,000 liters of water everyday in this
Mehndiganj
Coca Cola plant and as a result of which the water table has gone down
quite low, leaving the hand pumps and irrigation mechanisms non
functional. Farmers are left with not even a drop to irrigate their
fields
and forced to go for deep borings to survive and fight for water.

Coca Cola on the other hand has no role to play at all in water
conservation or harvesting, and is selling our own water at a price
which
competes with that of milk. It is indeed shameful the manner in which
our
elected representatives gave them a clean chit even after a reputed
agency
like CSE brought out a report against their soft drinks.

The choice has to be made clear, whether public interests weigh more
than
corporate interests or is it vice versa.

Many other activists and village based farmers have sustained injuries
from Coca Cola security & police brutalities, and the injuerd include :
state convenor of NAPM Nandlal, Rekha (whose abdomen received countless
blows of lathi by Mahila Police), another villager lady whose head
ripped
open due to police atrocity.

Sandeep Pandey, who heads the largest coalition of grassroot
organizations
in this Indian Sub continent (NAPM), said before leaving that 'it is
high
time to defy corporate domination. Giant corporations govern our people
and land. This rule by corporations violates the fundamental democratic
principle of consent of the governed. We need to usher in the change to
bring in a just and social order'.

====================================================================================

Coca-Cola is in trouble in India. Ever since the first allegations
arose
in Kerala, India, of water scarcity and polluted water resulting from
its
bottling operations, Coca-Cola's public relations department has
churned
out denials, insisting that the charges are false and that it is the
"target of a handful of extremist protesters."

Coca-Cola's global website carries their position on the issue and
claims
that the "local communities have welcomed our business as a good
corporate
neighbor."

Nothing could be further from the truth.

It is time for Coca-Cola to seriously examine and address the adverse
impacts of its operations in India. In fact, Coca-Cola needs to stop
treating the issues in India as a public relations problem and assign
it
to the appropriate department that will genuinely address the issues of
over-exploitation of water (leaving the community with scarce water
resources) and pollution of water sources as a result of its
operations.
Hindustan Coca-Cola and Bharat Coca-Cola are the Indian subsidiaries of
Coca-Cola.

To highlight these issues, we are profiling a series of community
struggles against Coca-Cola in India, all of which point to a pattern
in
the company's operations. The communities are left thirsting as
Coca-Cola
draws water from the common water resources. Its operations are
polluting
the scarce water that remains. The emergence of local, grassroots
struggles against the cola giant's operation in India should also serve
as
a reminder to Coca-Cola's bosses in Atlanta that this is not a public
relations problem that one can just "spin" and wish away. Rather, the
heart of the issue is a serious concern about control over natural
resources and the right of communities to determine how business is
done
in their communities.

Close to a year after our report on Coca-Cola's operations in
Plachimada,
Kerala, the communities in and around Coca-Cola's facility continue to
hold the factory responsible for their water woes. In fact, the local
panchayat (elected body at the village level) decided in April NOT to
renew the license issued to the Coca-Cola factory, on the grounds of
"protecting public interest." Protests, led primarily by Dalits
(formerly
untouchables) and Indigenous Peoples, have continued for over a year
against the factory, and new data validates the charges that
Coca-Cola's
bottling operations have depleted and contaminated the ground water.
Surendranath C visited the area and filed a report on the latest stage
of
the struggle in Plachimada, Kerala.

Local residents in Mehdiganj, near the holy city of Varanasi, are also
gearing up for a struggle against Coca-Cola. Coca-Cola has illegally
occupied a portion of the common property resources of the village and
was
found guilty of evading payment of land revenue by a local court.
Protesters were met at Coca-Cola's factory gates by about 200 police
personnel, sent to "protect" the plant along with 50 gun-toting private
security guards. This was not all for show-- the demonstrators were
beaten
up. The Coca-Cola plant in Mehdiganj enjoys heavily subsidized
electricity
and is accused of spewing toxics into surrounding agricultural fields
as
well as causing serious water shortage as a result of its operations.
We
have a report from Mehdiganj.

In yet another community, this time in Kudus village in Thane district,
villagers are forced to travel long distances in search of water which
has
dried up in their area as a result of Coca-Cola's operations. Villagers
are questioning the subsidized water, land and tax breaks that
Coca-Cola
receives from the state, only to leave them thirsting for water.
Coca-Cola
has built a pipeline to transport water from a river to its plant, and
an
activist opposing the pipeline was detained by police authorities for a
week. We carry a story from the Times News Network.

And in a proactive move, more than 7,000 people, mostly women, turned
out
to protest a proposed Coca-Cola factory in Sivaganga, Tamil Nadu.
Residents are justifiably worried that Coca Cola's operations in the
area
would lead to scarcity of water and contamination of water. We carry an
article from Frontline.

For Coca-Cola to claim, after being made aware of the community
protests
all over India, that "local communities have welcomed our business as a
good corporate neighbor," is nothing short of arrogance. But then,
Coca-Cola's arrogance should come as no surprise as it is accustomed to
having its way with governments.

Under the rules of entry for Coca-Cola into India, it was agreed that
Coca-Cola would divest 49% of its equity stake in India within 5 years.
In
an unprecedented move, the government of India seems to have given in
to
Coca-Cola's pressure, and is on the verge of changing its policy in
this
regard to suit Coca-Cola's interest. We are faced with a situation
where
Indian investors will own 49% of Coca-Cola's Indian operations, but
have
no vote whatsoever! Just like in the Enron case, the US government
played
a significant role. Robert Blackwill, the US ambassador to India, in a
letter to Brajesh Mishra, Principal Secretary to the Prime Minister of
India, stated that, "I would like to bring to your attention, and seek
your help in resolving, a potentially serious investment problem of
some
significance to both our countries. The case involves Coca-Cola, one of
the largest single foreign investors in India."

For a company that has had its way and has access to top US officials,
things are not so rosy after all. Coca-Cola may very well be the most
recognizable brand name in the world but it is also increasingly
becoming
the target of ire of local communities around the world as a result of
its
disregard for communities and the environment. Community struggles in
India against Coca-Cola are just a few of many that exist and are
emerging. Coca-Cola was also identified as a target of boycott to
protest
the US led invasion of Iraq. Sales of Coca-Cola plummeted in certain
areas
in India, such as Kerala.

In an extremely significant case, Coca-Cola's main Latin American
bottler
is facing trial for allegedly hiring right wing paramilitary forces
(aka
death squads) to murder and intimidate trade union organizers,
especially
from the union, Sinaltrainal. The suit has been brought under the Alien
Tort Claims Act, which allows corporations to be sued in the US for
crimes
committed overseas.

Coca-Cola is also the target of an international campaign demanding
that
Coca-Cola guarantee access to care and treatment for all their
employees
and their families living with HIV/AIDS, especially in the African
continent where Coca-Cola is a major employer.

Holding Coca-Cola accountable for its pollution, as various communities
in
India are trying to do, will not be the first such instance. In May
2003,
Coca-Cola de Panama was fined US$300,000 for polluting Matasnillo River
in
Panama.

Coca-Cola, it seems, is on its way to soon earning the reputation that
Enron enjoyed in India. Both Enron and Coca-Cola top the Foreign Direct
Investment list from the US in India. Enron's Indian operations (Dabhol
Power Corporation, a joint venture with Bechtel and General Electric,
among others) was the single largest foreign direct investment in India
and became the target of activists across the country due to
irregularities in its manner of carrying out its business, including
the
use of armed thugs to suppress opposition. Indians had shut down Enron
long before the financial scandal in the US brought the entire company
down.

Coca-Cola could soon join that list.

The India Resource Center will focus on supporting community struggles
against Coca-Cola in India. Check back regularly for updates.

6/24/2005 12:27 AM  
Blogger Narain Rajagopalan said...

//ரோசா, இவர்கள் தாம் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே செய்கிறவர்கள். எந்த உண்மையான செய்தியின் அடிப்படையிலோ, அல்லது அவர்களது மனச்சான்றின் அடிப்படையிலோ கூட அல்லாது வெறும் சாதிய வெறுப்பு, அடிமைப்படுத்தும் மனப்பான்மை, சமத்துவம், சாதியற்ற தன்மை, பெண்ணுரிமை இவைகளின் பால் கொண்ட அதியுச்ச வெறுப்பு இவைகளால் உந்தப்பட்டே இவர்கள் கிடைத்ததையும், தோன்றியதையும் சொல்லிவருகின்றனர். ஆதலினால் இவர்களுக்கு உண்மையான எந்த செய்திகள் சொல்லியும் பயனில்லை. ஆனால் இவர்களது தொடர்ச்சியான இந்த பொய்யும், புனைச்சுருட்டும் கலந்த இந்த பிரச்சாரத்தால் மற்றவர்களும் பாதிக்கப்படும் இடத்தே உங்களது எதிர்வினைகள் பயன்படும். மிக்க நன்றிகள்.//

அதே. அவ்வளவே. இதை விட என்னால் தெளிவாக சொல்லமுடியாது.

வாங்க வசந்த். நான் இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருக்க மாட்டேன். ஒரு சில வாரங்கள் கழித்து உட்புகுவதாக எண்ணம். வேலைகள் இருந்ததால், இப்போதுதான் பார்த்தேன்.

6/24/2005 2:56 PM  
Blogger Unknown said...

தமிழ் OBC பட்டியலிலுள்ள தமிழ் பேசாத 'தமிழர்கள்'

www.tn.gov.in/bcmbcmw/bclist.htm

இந்தி பேசும் ‘தமிழர்கள்’
Urdu Labbais including Rowthar and Marakayar Sourashtra
Urdu Sheik
Urdu Syed

தெலுங்கு பேசும் ‘தமிழர்கள்’
Reddy ( Ganjam)
Telugu Chetty
24-manai Chetty
Telugu Idaiyar
Yerukula
Kalavathila Boyas
Pedda Poyas
Telugupatty Chetty

கன்னடம் பேசும் ‘தமிழர்கள்’
Hegde
Gounder

தமிழ் பேசும் ‘அன்னியர்கள’ (FCs)
(ஏழை) Mudaliars (பணக்காரர்கள் காசு கொடுத்து OBCஆக மாறலாம்)
(ஏழை) Naatukottai Chettiar (பணக்காரர்கள் காசு கொடுத்து OBCஆக மாறலாம்)
Brahmins

இந்தி, தெலுங்கு, கன்னடம் பேசுவோர்க்கு முன்னுரிமையெனில் 'தமிழ்'அகம் பெயரில் சந்தேகம் தான்!!!

6/17/2008 9:33 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter